/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சூணாம்பேடில் ரேஷன் கடை கட்டுமான பணிகள் தீவிரம் சூணாம்பேடில் ரேஷன் கடை கட்டுமான பணிகள் தீவிரம்
சூணாம்பேடில் ரேஷன் கடை கட்டுமான பணிகள் தீவிரம்
சூணாம்பேடில் ரேஷன் கடை கட்டுமான பணிகள் தீவிரம்
சூணாம்பேடில் ரேஷன் கடை கட்டுமான பணிகள் தீவிரம்
ADDED : ஜூலை 22, 2024 06:59 AM
சூணாம்பேடு: சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பஜார் பகுதியில், நியாய விலை கடை செயல்பட்டு வந்தது, இதில், 350க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில், நியாய விலை கடை செயல்பட்டு வந்ததால், நாளடைவில் சேதமடைந்து, கட்டடத்தின் சுவர்கள் விரிசல் ஏற்பட்டு, மேல் தளத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து மோசமான நிலையில் இருந்தது.
இதனால், மழைக்காலத்தில் மேல் தளத்தில் மழை நீர் பெருக்கெடுத்து, அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் சேதமடைந்தன.
கடந்த ஆண்டு, பெருமாள் கோவில் தெருவில் உள்ள தனியார் கட்டடத்திற்கு மாற்றப்பட்டு, நியாய விலைக் கடை தற்போது செயல்பட்டு வருகிறது.
எனவே, நியாய விலைக் கடைக்கு புதிதாக கட்டடம் அமைக்க வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் வைத்து வந்தனர்.
காஞ்சிபுரம் எம்.பி., மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பழைய நியாய விலைக் கடை இடித்து அகற்றப்பட்டது.
தொடர்ந்து, அதே இடத்தில் புதிய நியாய விலைக் கடை கட்டடம் அமைக்கும் பணி, சில தினங்களுக்கு முன் துவங்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.