Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஸ்தலசயனர் திருத்தேருக்கு பாதுகாப்பு கூரை அமைப்பு

ஸ்தலசயனர் திருத்தேருக்கு பாதுகாப்பு கூரை அமைப்பு

ஸ்தலசயனர் திருத்தேருக்கு பாதுகாப்பு கூரை அமைப்பு

ஸ்தலசயனர் திருத்தேருக்கு பாதுகாப்பு கூரை அமைப்பு

ADDED : ஜூலை 22, 2024 06:51 AM


Google News
மாமல்லபுரம்: ஹிந்து சமய அறநிலையத்துறையின், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் திருத்தேரில், சித்திரை பிரம்மோற்சவத்தில், ஸ்தலசயன பெருமாள் மற்றும் அவதார ஜெயந்தி உற்சவத்தில் பூதத்தாழ்வார் ஆகியோர் உலா செல்வர்.

இத்தேர், கோவில் வளாக பகுதியில் நிறுத்தி, பாதுகாப்பு தகடு கூரை அமைத்து மூடப்பட்டிருந்தது. கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு, கடந்த பிப்., 1ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

திருப்பணிகள் உபயதாரர், ஆகம, வாஸ்து அமைப்பின்படி, கோவில் வளாகத்திற்கு வெளியில் தேரை நிறுத்த பரிந்துரைத்தார். அதன்பின், கடந்த சித்திரை பிரம்மோற்சவ திருத்தேர் உலாவிற்கு பின், வளாகத்திற்கு வெளிப்புறம் தேர் நிறுத்தப்பட்டது.

முந்தைய இடத்தில் உள்ள பாதுகாப்பு தகடு கூரையை பிரித்து, தேருக்கு பாதுகாப்பாக மூடாமல், மூன்று மாதங்களாக தாமதமானது.

வெயில், மழை, சூறாவளி காற்று ஆகியவற்றால், திறந்தவெளியில் நின்ற தேர் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, தேர் நிறுத்துமிடத்தில் கான்கிரீட் தாங்குதளம் அமைக்கப்பட்டது.

நேற்று, முந்தைய இடத்தில் இருந்த பாதுகாப்பு தகடுகளை கிரேன் வாயிலாக அகற்றி, தேருக்கு பாதுகாப்பாக அமைத்து தேர் மூடப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us