/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வாலிபரிடம் மொபைல்போன் பறித்தவருக்கு 'காப்பு' வாலிபரிடம் மொபைல்போன் பறித்தவருக்கு 'காப்பு'
வாலிபரிடம் மொபைல்போன் பறித்தவருக்கு 'காப்பு'
வாலிபரிடம் மொபைல்போன் பறித்தவருக்கு 'காப்பு'
வாலிபரிடம் மொபைல்போன் பறித்தவருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 24, 2024 12:36 AM
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார், 21.
இவர், கடந்த 20ம் தேதி இரவு, கீழக்கரணை பகுதியில் நடந்து சென்ற போது, மர்ம நபர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போனை பறித்துச் சென்றார்.
இது குறித்து, நந்தகுமார் மறைமலை நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திக், 22, என்பவர், மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது.
அவரை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.