/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வரும் 25ல் தபால் சேவை குறை தீர்வு கூட்டம் வரும் 25ல் தபால் சேவை குறை தீர்வு கூட்டம்
வரும் 25ல் தபால் சேவை குறை தீர்வு கூட்டம்
வரும் 25ல் தபால் சேவை குறை தீர்வு கூட்டம்
வரும் 25ல் தபால் சேவை குறை தீர்வு கூட்டம்
ADDED : மார் 14, 2025 10:54 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் கூட்டம், வரும் 25ம் தேதி நடக்கிறது.
அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சண்முகச்சாமி அறிக்கை:
செங்கல்பட்டு வரதனார் தெருவில் உள்ள செங்கல்பட்டு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான தபால் சேவை குறை தீர்க்கும் கூட்டம், வரும் 25ம் தேதி மாலை 3:00 மணிக்கு நடக்கிறது.
இந்த கூட்டத்தில், தபால் சம்பந்தப்பட்ட புகார் எனில், தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர், பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை, துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக புகார் எனில், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடித தொடர்புகள் இருந்தால், புகாருடன் இணைக்க வேண்டும். குறைகளை 22ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.