Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பரோட்டா சாப்பிட்டவர் மாரடைப்பால் உயிரிழப்பு

பரோட்டா சாப்பிட்டவர் மாரடைப்பால் உயிரிழப்பு

பரோட்டா சாப்பிட்டவர் மாரடைப்பால் உயிரிழப்பு

பரோட்டா சாப்பிட்டவர் மாரடைப்பால் உயிரிழப்பு

ADDED : ஜூன் 13, 2024 06:00 PM


Google News
Latest Tamil News
சித்தாமூர்: சித்தாமூர் அடுத்த பெருக்கரணை கிராமத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம், 28. பெருக்கரணை ஊராட்சியில், 1வது வார்டு உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.

இவருக்கு, ஏற்கனவே இருதயம் சார்ந்த பிரச்னை உள்ளதால், சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மதுராந்தகத்தில் நடந்த நண்பரின் சுபநிகழ்ச்சிக்கு சென்ற அவர், உறவினர் வீட்டில் பரோட்டா சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினார்.

வீட்டில் அமர்ந்திருந்த போது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

உறவினர்கள், ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மோகனசுந்தரம் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, சித்தாமூர் போலீசார் உயிரிழப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us