Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செல்வவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

செல்வவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

செல்வவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

செல்வவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

ADDED : ஜூலை 11, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் ஊராட்சியில், 100 ஆண்டு கள் பழமை வாய்ந்த செல்வவிநாயகர் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் சிறியதாகவும், பழுதடைந்தும் இருந்தது. எனவே, கோவிலை அகற்றி விரிவுபடுத்தி கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி பாலாலயம் செய்து, திருப்பணிகள் துவங்கப்பட்டது. புதிதாக கோவில், விமானம், மஹா மண்டபம் அமைக்கப்பட்டு, வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன.

பணிகள் முடிவுற்று, கடந்த 8ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோபூஜை,கணபதி பூஜையுடன்கும்பாபிஷேக விழாதுவங்கியது.

நேற்று காலை 7:30 மணிக்கு நான்காம் கால ஹோமம், பூர்ணாஹூதி முடிந்து, புனிதநீர் கலசங்கள் மேள தாளத்துடன் கோவிலைச் சுற்றி எடுத்து வரப்பட்டன.

காலை 10:00 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு செல்வவிநாயகர் வீதியுலா நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us