Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வீடு புகுந்து மாணவி பலாத்காரம் பதுங்கிய கேரள வாலிபர் கைது

வீடு புகுந்து மாணவி பலாத்காரம் பதுங்கிய கேரள வாலிபர் கைது

வீடு புகுந்து மாணவி பலாத்காரம் பதுங்கிய கேரள வாலிபர் கைது

வீடு புகுந்து மாணவி பலாத்காரம் பதுங்கிய கேரள வாலிபர் கைது

ADDED : ஜூலை 27, 2024 07:24 AM


Google News
Latest Tamil News
சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து, கேரளாவைச் சேர்ந்த, 22 வயது பெண் தங்கி, கல்லுாரி ஒன்றில் படித்து வந்தார். அந்த வீட்டின் அருகே, சினிமா தொடர்பான நிறுவனம் ஒன்று செயல்படுகிறது.

இதில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த நந்துலால், 23, என்பவர் பணிபுகிறார். ஒரே மாநிலத்தவர்கள் என்பதால், இருவரிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 19ம் தேதி, மாணவி தனியாக இருப்பதை அறிந்து, அதிகாலை 5:30 மணியளவில் வீடு புகுந்து மாணவியை பாலியல் பலாத் காரம் செய்துள்ளார். இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.

இதில், சம்பவம் நடந்த அன்றைய தினம், வாலிபர் தலைமறைவானது தெரிய வந்தது. அவர் கேரள மாநிலம், திருச்சூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

அங்கு தனிப்படை போலீசார் முகாமிட்டு நந்துலாலை கைது செய்து, கேரள மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், அங்கிருந்து அழைத்து வந்து, சென்னை புழல் சிறையில், நேற்று முன்தினம் அடைத்தனர்.

கேரளாவில் தனிப்படை போலீசார் ஆறு பேர், தன்னை நெருங்கியதை அறிந்த நந்துலால், தன் கூட்டாளிகள், 10 பேரை திரட்டி, அவர்களுக்கு தனிப்படை போலீசாரை அடையாளம் காட்டி, இவர்கள் தன்னை கடத்த வந்து இருப்பதாக கூறி, தாக்குதல் நடத்தி தப்பிக்க திட்டம் போட்டுள்ளார்.

போலீசாரை தாக்க முயற்சி

கேரளாவில் தனிப்படை போலீசார் ஆறு பேர், தன்னை நெருங்கியதை அறிந்த நந்துலால், தன் கூட்டாளிகள், 10 பேரை திரட்டி, அவர்களுக்கு தனிப்படை போலீசாரை அடையாளம் காட்டி, இவர்கள் தன்னை கடத்த வந்து இருப்பதாக கூறி, தாக்குதல் நடத்தி தப்பிக்க திட்டம் போட்டுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us