/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சவூதி விபத்தில் காயமடைந்த கல்பாக்கம் ஊழியர் இறப்பு சவூதி விபத்தில் காயமடைந்த கல்பாக்கம் ஊழியர் இறப்பு
சவூதி விபத்தில் காயமடைந்த கல்பாக்கம் ஊழியர் இறப்பு
சவூதி விபத்தில் காயமடைந்த கல்பாக்கம் ஊழியர் இறப்பு
சவூதி விபத்தில் காயமடைந்த கல்பாக்கம் ஊழியர் இறப்பு
ADDED : ஜூலை 05, 2024 12:40 AM

கல்பாக்கம்:கல்பாக்கம், ஜி.எஸ்.ஓ., போக்குவரத்து பிரிவு எழுத்தர் சாதிக்பாஷா, 47. இவர், 'ஹஜ்' புனித பயணமாக, மனைவி ஹஸ்ரா சகானாஸ், 40, தாயார் இர்ஷாத்பேகம், 68, ஆகியோருடன், அண்மையில் சவூதி அரேபியா நாட்டிற்கு சென்றார். இரண்டு வயது மகளை, உறவினர் வீட்டில் ஒப்படைத்திருந்தார்.
கடந்த ஜூன் 30ம் தேதி, மெக்காவிலிருந்து மதினாவிற்கு, 'ஹஜ்' குழுவினர் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது. அதில் பயணம் செய்த சாதிக்பாஷாவின் தாய் இர்ஷாத்பேகம், சம்பவஇடத்திலேயே பலியானார்.
சாதிக்பாஷா, ஹஸ்ரா சகானாஸ் இருவரும் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், சாதிக்பாஷா 'கோமா' நிலையை அடைந்தார்.
கடந்த 3ம் தேதி பிற்பகல், சிகிச்சை பலனின்றி இறந்ததாக உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
'ஹஜ்' கமிட்டியினர், இறந்தவர்கள் உடல்களை, அதே நாட்டில் அடக்கம் செய்யவும், மனைவியை இந்தியா அழைத்துவரவும் ஏற்பாடுகள்நடப்பதாக, ஜி.எஸ்.ஓ., அலுவலகம் தரப்பில்தெரிவித்தனர்.