Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஏரி சீரமைப்பில் அதிகாரிகள் அலட்சியம் கால்வாய் ஆக்கிரமிப்பால் வெள்ள அபாயம்

ஏரி சீரமைப்பில் அதிகாரிகள் அலட்சியம் கால்வாய் ஆக்கிரமிப்பால் வெள்ள அபாயம்

ஏரி சீரமைப்பில் அதிகாரிகள் அலட்சியம் கால்வாய் ஆக்கிரமிப்பால் வெள்ள அபாயம்

ஏரி சீரமைப்பில் அதிகாரிகள் அலட்சியம் கால்வாய் ஆக்கிரமிப்பால் வெள்ள அபாயம்

ADDED : ஜூலை 28, 2024 02:00 AM


Google News
Latest Tamil News
செய்யூர்,:செய்யூர் கிராமத்தில், 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த ஏரி வாயிலாக, 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் நீர்ப்பாசனம் பெறுகிறது.

இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. நெல், மணிலா, உளுந்து போன்றவை பயிரிடப்படுகிறது. சம்பா பருவத்தில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.

விராலுார், புத்துார் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், கால்வாய் வழியாக செய்யூர் ஏரிக்கு வந்தடைகிறது. செய்யூர் ஏரியில் இருந்து கலங்கல்கள் மற்றும் மதகுகள் வழியே உபரிநீர் வெளியேறி, கால்வாய் வாயிலாக விவசாய நிலங்களுக்கு செல்கிறது.

இந்த ஏரி பல ஆண்டுகளாக துார்வாரி சீரமைக்கப்படாமல் உள்ளதால், மழைக்காலத்தில் ஏரியில் போதிய நீரை தேக்க முடியாமல் வீணாக தண்ணீர் வெளியேறுகிறது.

மேலும், உபரிநீர் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், மழைக்காலத்தில் தண்ணீர் செல்ல வழியின்றி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வயல்வெளியில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைகின்றன. மேலும், ஏரியின் கரைப்பகுதியில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு, கரைகள் பலவீனமாக உள்ளன.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, செய்யூர் ஏரியை துார்வாரி சீரமைத்து, உபரிநீர் கால்வாய்களை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us