Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ திருவள்ளூரில் பயங்கரம் வாலிபர் குத்திக்கொலை

திருவள்ளூரில் பயங்கரம் வாலிபர் குத்திக்கொலை

திருவள்ளூரில் பயங்கரம் வாலிபர் குத்திக்கொலை

திருவள்ளூரில் பயங்கரம் வாலிபர் குத்திக்கொலை

ADDED : ஜூன் 01, 2024 04:44 AM


Google News
Latest Tamil News
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சி மணவாள நகர் பகுதி எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் சதீஷ், 27.

சுகாதாரத்துறையில் துாய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் இவரது சகோதரி ராஜேஸ்வரி என்பவருக்கும், உடன் பணிபுரியும் லட்சுமி என்பவருக்குமிடையே பிரச்னை உள்ளது. அதனால், சதீஷ் லட்சுமியிடம் தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையோரம் வந்த லட்சுமியின் மகன்கள் சூர்யா, தினேஷ் ஆகிய இருவரும், சதீஷிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தினர்.

இதில், சதீஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். தடுக்க வந்த சதீஷின் நண்பர் முரளி, படுகாயமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து, சதீஷ் உடலை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

வாலிபரை கொலை செய்த வழக்கில் தினேஷ், 19, அஜீத், 23 மற்றும் கீழ்நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் இருவர் என, 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us