/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ காயமடைந்து குணமடைந்தவர் 3 மாதங்கள் கடந்து உயிரிழப்பு காயமடைந்து குணமடைந்தவர் 3 மாதங்கள் கடந்து உயிரிழப்பு
காயமடைந்து குணமடைந்தவர் 3 மாதங்கள் கடந்து உயிரிழப்பு
காயமடைந்து குணமடைந்தவர் 3 மாதங்கள் கடந்து உயிரிழப்பு
காயமடைந்து குணமடைந்தவர் 3 மாதங்கள் கடந்து உயிரிழப்பு
ADDED : ஜூன் 09, 2024 02:30 AM
சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பழனி, 45. கடந்த மார்ச் 18ம் தேதி இளையனார்குப்பம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்து, தலையின் பின்புறம் காயமடைந்தார்.
செங்கல்பட்டு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, காட்டாங்குளத்துார் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சைக்கு பின், ஏப்., 1ம் தேதி வீடு திரும்பினார். ஜூன் 3ம் தேதி, தலையில் வலி ஏற்பட்டு, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.
நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.