/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குறைதீர் கூட்டம் 8 மனுக்கள் ஏற்பு குறைதீர் கூட்டம் 8 மனுக்கள் ஏற்பு
குறைதீர் கூட்டம் 8 மனுக்கள் ஏற்பு
குறைதீர் கூட்டம் 8 மனுக்கள் ஏற்பு
குறைதீர் கூட்டம் 8 மனுக்கள் ஏற்பு
ADDED : ஜூலை 03, 2024 08:55 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில்எஸ்.பி., குறை தீர்க்கும் கூட்டத்தில், நில பிரச்னைகள் உள்ளிட்ட எட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
செங்கல்பட்டு அடுத்த மலையடிவேண்பாக்கத்தில், மாவட்ட காவல்அலுவலகம் உள்ளது.
இங்கு, எஸ்.பி., கூட்ட அரங்கில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்,எஸ்.பி., சாய் பிரணீத் தலைமையில், நேற்று நடந்தது.
இந்த முகாமில், பண மோசடி, நில பிரச்னை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய எட்டு மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது, செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம்காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்கள் விசாரணை செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க எஸ்.பி., உத்தரவிட்டார்.