Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வே லை இல்லா பட்டதாரிகள் உதவித்தொகை பெற அழைப்பு

வே லை இல்லா பட்டதாரிகள் உதவித்தொகை பெற அழைப்பு

வே லை இல்லா பட்டதாரிகள் உதவித்தொகை பெற அழைப்பு

வே லை இல்லா பட்டதாரிகள் உதவித்தொகை பெற அழைப்பு

ADDED : ஜூலை 16, 2024 03:52 AM


Google News
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் வழிகாட்டு மையத்தில், ஜூலை மாதம் துவங்கும் காலாண்டிற்கு, வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற, பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதி பெற்று, வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்து, ஐந்து ஆண்டுக்கு மேல் வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை, வேலை வாய்ப்பு அலுவலகத்தில், ஒரு ஆண்டு பதிவு செய்து இருந்தால் போதுமானது.

பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்படிப்புகள் படித்தவர்கள், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோர், உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற முடியாது.

குடும்ப ஆண்டு வருமானம், 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தனர் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.மாற்றுத்திறனாளிகளுக்கு வயது மற்றும் ஆண்டு வருமானம் வரம்பு ஏதுமில்லை.

உதவித்தொகை பெற விரும்பும் மனுதாரர்கள், வேலை வாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 10க்குள் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப் பிரிவில், அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us