Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 4 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

4 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

4 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

4 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

ADDED : ஜூலை 15, 2024 01:24 AM


Google News
Latest Tamil News
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சியில் வீடு கட்டுவதற்கு பள்ளம் தோண்டியபோது சுவாமி சிலைகள் கிடைத்தன.

முதலில் சிவலிங்கமும், அதை தொடர்ந்து முருகன், பெரிய நந்தி, சிறிய நந்தி, பலிபீடம் என, ஒன்றன்பின் ஒன்றாக கிடைத்தன. இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியது.

வண்டலுார் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து, வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா கூறியதாவது:

நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன் சித்தர் ஒருவர், கோவில் கட்டி வழிபட்டு வந்ததாகவும், அவர் மறைவுக்கு பின் அங்கிருந்த கோவில், வீடு ஆகியவை பாழடைந்து, தரைமட்டமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த இடம் பட்டா இடமா அல்லது ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடமா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us