/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி உண்ணாவிரதம் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி உண்ணாவிரதம்
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி உண்ணாவிரதம்
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி உண்ணாவிரதம்
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி உண்ணாவிரதம்
ADDED : ஜூலை 03, 2024 08:52 PM
பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த தொண்டமநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட தாதங்குப்பம் கிராமத்தில், 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது.
ஏரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறியும், மக்கள் சட்ட வழிகாட்டி இயக்கம் சார்பாக, பவுஞ்சூரில் நேற்று அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இதில், 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.