Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அதிகாலையில் மது விற்பனை தடுக்க பெண்கள் எதிர்பார்ப்பு

அதிகாலையில் மது விற்பனை தடுக்க பெண்கள் எதிர்பார்ப்பு

அதிகாலையில் மது விற்பனை தடுக்க பெண்கள் எதிர்பார்ப்பு

அதிகாலையில் மது விற்பனை தடுக்க பெண்கள் எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 25, 2024 06:28 AM


Google News
தாம்பரம் : சென்னையின் புறநகரான பல்லாவரம், பம்மல், பல்லாவரம் - திருநீர்மலை சாலை, குரோம்பேட்டை பேருந்து நிலையம், எம்.ஐ.டி., மேம் பாலத்தின் கீழ் பகுதி, கிஷ்கிந்தா சாலை, செம்பாக்கம் திருமலை நகர் பகுதியில் 24 மணி நேரமும்மது விற்பனைநடக்கிறது.

தாம்பரம் மார்க்கெட், சானடோரியம் மேம்பாலத்தின் கீழ் பகுதி, காமராஜபுரம் பேருந்து நிறுத்தம், கடப்பேரி ஜி.எஸ்.டி., சாலை, கிழக்குதாம்பரம், மண்ணிவாக்கம் உள்ளிட்ட இடங்களில், மதுக்கூடங்களில்அதிகாலை முதல் சரக்கு விற்பனைநடக்கிறது.

அதிகாரிகள்மற்றும் போலீசாரின் துணையோடு,சரக்கு விற்பனை ஜோராகநடக்கிறது.

இது குறித்துபல முறை புகார்தெரிவித்தும், மதுவிலக்கு போலீசார், மதுக்கூட உரிமையாளர்களுடன் கைகோர்த்து,அதிகாலை சரக்குவிற்பனைக்குபச்சைக்கொடிகாட்டி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சிகள்ளச்சாராயசம்பவத்தை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கையை போல், புறநகரில் கொடிகட்டி பறக்கும் அதிகாலை சரக்கு விற்பனையையும், இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என, அரசுக்கு பெண்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us