Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ திருப்போரூரில் செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

திருப்போரூரில் செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

திருப்போரூரில் செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

திருப்போரூரில் செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

ADDED : ஜூலை 11, 2024 12:47 AM


Google News
Latest Tamil News
திருப்போரூர்,:திருப்போரூர் பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, தி.நகர், பிராட்வே, கோயம்பேடு உட்படபல்வேறு இடங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப் படுகின்றன.

இந்த பேருந்து நிலையத்திற்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்தில் பயணியரின் நலன் கருதி குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது.

ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால், கடந்த ஓராண்டாக குடிநீர்சுத்திகரிப்பு மையம் மூடப்பட்டுள்ளது. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் மூடி வைத்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை, பயணியர் பயன்படுத்தும் வகையில், மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என,பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us