/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ போன் நம்பர் கொடுக்க மறுத்தவருக்கு வெட்டு போன் நம்பர் கொடுக்க மறுத்தவருக்கு வெட்டு
போன் நம்பர் கொடுக்க மறுத்தவருக்கு வெட்டு
போன் நம்பர் கொடுக்க மறுத்தவருக்கு வெட்டு
போன் நம்பர் கொடுக்க மறுத்தவருக்கு வெட்டு
ADDED : ஜூன் 24, 2024 06:05 AM
சென்னை: மொபைல் போன் எண் கொடுக்க மறுத்த தொழிலாளியின் தலையில் வெட்டிய மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை, புளியந்தோப்பு, கிரே நகரைச் சேர்ந்தவர் தேன்மெயர், 30. இவர், அங்குள்ள பரவத் என்பவரின் வீட்டில் தங்கியிருந்து, கார்பென்டராக வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் அங்கு சென்ற நால்வர், 'உன் முதலாளியின் மொபைல் போன் எண்ணை கொடு' என்றனர். அவர், எனக்கு தெரியாது எனக்கூறி உள்ளார்.
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது, அந்த நால்வரில் ஒருவர், தன்னிடம் இருந்த கத்தியால், தேன்மெயரின் தலையில் வெட்டினார். அதன் பின், அங்கிருந்து தப்பி சென்றனர். படுகாயமடைந்த அவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து, பேசின்பாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.