Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சிறுபான்மையினருக்கு கடனுதவி; விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறுபான்மையினருக்கு கடனுதவி; விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறுபான்மையினருக்கு கடனுதவி; விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறுபான்மையினருக்கு கடனுதவி; விண்ணப்பங்கள் வரவேற்பு

ADDED : ஜூலை 07, 2024 10:50 PM


Google News
செங்கல்பட்டு : சிறுபான்மையினர் தொழில், கல்வி உள்ளிட்டவற்றுக்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வாயிலாக, தனிநபர் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில், கைவினை தொழில், கல்வி ஆகியவற்றுக்கு, கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

தனிநபர் கடன், ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகித்தில், 20 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ - மாணவியருக்கு, 20 லட்சம் ரூபாய் வரை, 3 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், இக்கடனுதவியை பெற, விண்ணப்பங்களை பூர்த்திசெய்து, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us