Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கை ஏ.டி.எம்., மையம் கண்ணாடி உடைப்பு

செங்கை ஏ.டி.எம்., மையம் கண்ணாடி உடைப்பு

செங்கை ஏ.டி.எம்., மையம் கண்ணாடி உடைப்பு

செங்கை ஏ.டி.எம்., மையம் கண்ணாடி உடைப்பு

ADDED : ஜூலை 23, 2024 01:26 AM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு, செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட ராம்பாளையம் பகுதியில் உள்ள கட்டடத்தில், தனியார் வங்கி ஏ.டி.எம்., மையம் செயல்பட்டு வருகிறது.

நேற்று காலை, இந்த ஏ.டி.எம்., மையத்தின் முன் பக்க கண்ணாடி கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்ட அப்பகுதிவாசிகள், செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெரிய கற்கள் கொண்டு கண்ணாடி கதவு உடைக்கப்பட்டு இருந்ததை அறிந்தனர். மேலும், ஏ.டி.எம்., இயந்திரத்தை ஆய்வு செய்த போது, எந்த சேதாரமும் ஏற்படவில்லை என, தெரிய வந்தது.

மது போதையில், மர்ம நபர்கள் யாராவது கண்ணாடிகளை உடைத்தனரா அல்லது ஏ.டி.எம்., மையத்தில் கொள்ளை முயற்சி நடந்ததா ஆகிய கோணங்களில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us