Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கோவில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கோவில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கோவில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கோவில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

ADDED : ஜூன் 13, 2024 05:43 PM


Google News
திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த மானாமதி- - காரணை செல்லும் சாலையில், குன்னாத்தம்மன் கோவில் உள்ளது. வழக்கம்போல், நேற்று முன்தினம் காலை, கோவில் நடை திறக்க கோவில் பூசாரி சென்றுள்ளார்.

அப்போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 2.25 சவரன் நகை, 15,000 ரூபாய் திருடுபோனது தெரியவந்தது.

இதுதொடர்பாக, கோவில் பூசாரி அளித்த புகாரின்படி, மானாமதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us