/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சிறுவர்களுக்கான மாநில தடகளம் செயின்ட் ஜோசப் பள்ளி 2வது இடம் சிறுவர்களுக்கான மாநில தடகளம் செயின்ட் ஜோசப் பள்ளி 2வது இடம்
சிறுவர்களுக்கான மாநில தடகளம் செயின்ட் ஜோசப் பள்ளி 2வது இடம்
சிறுவர்களுக்கான மாநில தடகளம் செயின்ட் ஜோசப் பள்ளி 2வது இடம்
சிறுவர்களுக்கான மாநில தடகளம் செயின்ட் ஜோசப் பள்ளி 2வது இடம்
ADDED : ஜூலை 16, 2024 04:20 AM

சென்னை : மத்திய அரசின் குறு, சிறு தொழில் அமைச்சகம், பிட் இந்திய அமைப்பு சார்பில், சிறுவர்களுக்கான மாநில தடகளப் போட்டி, வண்டலுாரில் நடந்தது.
இதில், 76 பள்ளிகள் மற்றும் ஒன்பது தனியார் அகாடமிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
போட்டியில், சென்னை செம்மஞ்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் இருந்து, 75 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
அப்பள்ளியின் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக, 5 தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களை வென்று, இரண்டாவது இடத்தை தட்டிச் சென்றது.
அதே பள்ளியின் சினாமிகா, இறை அருள் ஆகியோர் தனி நபர் 'சாம்பியன்' பட்டத்தை வென்று அசத்தினர். போட்டியில், முதலிடத்தை கவுரிவாக்கத்தைச் சேர்ந்த மலை ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி கைப்பற்றியது.