Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பேருந்து நிழற்குடை அமைக்க ஆப்பூர் கிராமத்தினர் கோரிக்கை

பேருந்து நிழற்குடை அமைக்க ஆப்பூர் கிராமத்தினர் கோரிக்கை

பேருந்து நிழற்குடை அமைக்க ஆப்பூர் கிராமத்தினர் கோரிக்கை

பேருந்து நிழற்குடை அமைக்க ஆப்பூர் கிராமத்தினர் கோரிக்கை

ADDED : ஜூலை 28, 2024 11:39 PM


Google News
Latest Tamil News
மறைமலை நகர் : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆப்பூர் ஊராட்சியில் ஆப்பூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இங்கு, செங்கல்பட்டு -- திருவள்ளூர் தடத்தில், 82சி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த இரண்டு கிராமங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில், இருபுறமும் பேருந்து நிழற்குடை இல்லாததால், பயணியர் வெயிலிலும், மழையிலும் பேருந்துக்காக நீண்ட நேரம் நின்றபடி காத்திருக்கும் நிலை உள்ளது.

இது குறித்து, அப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது:

இந்த பேருந்து நிறுத்தத்தை, ஆப்பூர், வளையக்கரணை, தாசரிகுன்னத்துார் கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சிங்கபெருமாள் கோவில்- - ஸ்ரீபெரும்புதுார் மாநில நெடுஞ்சாலை, பத்து ஆண்டுகளுக்கு முன், ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட போது, இந்த தடத்தில் இருந்த பேருந்து நிழற்குடைகள் அகற்றப்பட்டன.

இதுவரை, மீண்டும் நிழற்குடை அமைக்கப்படாததால், பெண்கள், பள்ளி மாணவ -- மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, இந்த பகுதியில் நிழற்குடை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து ஆப்பூர் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறியதாவது:

ஆப்பூர் ஊராட்சியில் பேருந்து நிழற்குடை அமைக்க, செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து, 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டு உள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us