/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நிலப்பிரச்னை தொடர்பான 7 மனுக்கள் ஏற்பு நிலப்பிரச்னை தொடர்பான 7 மனுக்கள் ஏற்பு
நிலப்பிரச்னை தொடர்பான 7 மனுக்கள் ஏற்பு
நிலப்பிரச்னை தொடர்பான 7 மனுக்கள் ஏற்பு
நிலப்பிரச்னை தொடர்பான 7 மனுக்கள் ஏற்பு
ADDED : ஜூன் 12, 2024 11:38 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில் நடந்த எஸ்.பி., குறை தீர்க்கும் கூட்டத்தில், நிலப்பிரச்னை தொடர்பாக ஏழு மனுக்கள், விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
செங்கல்பட்டு அடுத்த மலையடிவேண்பாக்கத்தில், மாவட்ட காவல் அலுவலகம் உள்ளது. இங்கு, எஸ்.பி., கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், எஸ்.பி., சாய் பிரணீத் தலைமையில், நேற்று நடந்தது.
இந்த முகாமில், நிலப் பிரச்னை தொடர்பாக ஏழு மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது, மதுராந்தகம், மாமல்லபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்கள் விசாரணை செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எஸ்.பி., உத்தரவிட்டார்.