Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மயங்கி விழுந்த கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மயங்கி விழுந்த கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மயங்கி விழுந்த கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மயங்கி விழுந்த கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ADDED : ஜூன் 01, 2024 04:28 AM


Google News


பவுஞ்சூர் : பவுஞ்சூர் அருகே சோழக்கட்டு கிராமத்தை சேர்ந்த பிரகலாதன் மனைவி சுதா, 28. ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார்.

கடந்த 27ம் தேதி, இரவு 1:30 மணிக்கு, திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், சுதா மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சுதாவை பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றில் இருந்த குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின், அறுவை சிகிச்சை வாயிலாக மருத்துவர்கள் இறந்த குழந்தையை வெளியே எடுத்தனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த சுதாவும், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அடுத்தடுத்து குழந்தையும், தாயும் இறந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us