Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ' மக்களுடன் முதல்வர்' முகாம் ஒரத்தியில் 700 மனுக்கள்

' மக்களுடன் முதல்வர்' முகாம் ஒரத்தியில் 700 மனுக்கள்

' மக்களுடன் முதல்வர்' முகாம் ஒரத்தியில் 700 மனுக்கள்

' மக்களுடன் முதல்வர்' முகாம் ஒரத்தியில் 700 மனுக்கள்

ADDED : ஜூலை 18, 2024 12:09 AM


Google News
அச்சிறுபாக்கம்:மதுராந்தகம் வட்டாரத்தில், 'மக்களுடன் முதல்வர்' முகாம், நேற்று முன்தினம் ஒரத்தி ஊராட்சியில் துவங்கியது.

இம்முகாமில், வருவாய், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, வீட்டு வசதி, மாற்றுத்திறனாளிகள் நலம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மின் வாரியம் உள்ளிட்ட துறையினர் பங்கேற்றனர்.

நேற்று முன்தினம், ஒரத்தி சமுதாய நலக்கூடத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில், மதுராந்தகம் வட்டாட்சியர் துரைராஜன், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானப்பிரகாசம், அச்சிறுபாக்கம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று, மக்களிடம் மனுக்களை பெற்றனர்.

இதில், பொதுமக்களிடமிருந்து, 700க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றன. மனுக்கள் மீது ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us