Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி கோர விபத்து தாய், -மகள் பலி; தந்தை, மூத்த மகள் 'சீரியஸ்'

அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி கோர விபத்து தாய், -மகள் பலி; தந்தை, மூத்த மகள் 'சீரியஸ்'

அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி கோர விபத்து தாய், -மகள் பலி; தந்தை, மூத்த மகள் 'சீரியஸ்'

அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி கோர விபத்து தாய், -மகள் பலி; தந்தை, மூத்த மகள் 'சீரியஸ்'

ADDED : ஜூலை 08, 2024 01:52 AM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு தாழம்பூரில் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில், தாய் - மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தந்தை மற்றும் மூத்த மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு, தாழம்பூரில் உள்ள 'காசாகிராண்ட் சுப்ரீம்' அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் சுதர்சன், 37. இவர், ஆந்திர மாநிலம் தடாவில் மின் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி ரஞ்சினி, 36. தம்பதிக்கு சாத்விகா, 10, மனஸ்வினி, 6, என, இரண்டு மகள்கள்.

வார இறுதி நாட்களை முன்னிட்டு, தடாவில் இருந்து குடும்பத்தினருடன் சுதர்சன் தாழம்பூர் வந்தார்.

நேற்று முன்தினம் காலை தாழம்பூரில் இருந்து, மதுராந்தகம், கூடலுாரில் உள்ள தன் மாட்டு பண்ணையை பார்வையிட 'ஹூண்டாய்' காரில் குடும்பத்துடன் சென்றார்.

பின், நேற்று முன்தினம் இரவு திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். செங்கல்பட்டு அருகே பழவேலி பகுதியில் வந்தபோது, சாலையை கடக்க முயன்ற தனியார் நிறுவன பேருந்தில், சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து மோதியது.

ஆம்னி பேருந்தின் பின்னே சென்ற சுதர்சனின் கார், ஆம்னி பேருந்து மீது மோத, காரின் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது மோதியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில், ஆம்னி பேருந்துக்கும் லாரிக்கும் இடையில் சிக்கிய கார் அப்பளமாக நொறுங்கியது. இதில், ரஞ்சனி மற்றும் இளைய மகள் மனஸ்வினி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த சுதர்சன் மற்றும் சாத்விகாவை அங்கிருந்தோர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், காரில் சிக்கிய தாய், மகள் உடல்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் வாயிலாக அப்புறப்படுத்தினர். செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், 5 கி.மீ., துாரத்திற்கும் மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 2 மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது.

மற்றொரு சம்பவம்


செய்யூர் அடுத்த மேட்டுப்பருக்கல் கிராமத்தைச் சேர்ந்த குமார், 52. இவரது மனைவி மங்கள லட்சுமி, 46.

இருவரும், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தொழுப்பேடு அடுத்த இரட்டைமலை சந்திப்பு அருகே, 'ஹோண்டா யுனிகார்ன்' பைக்கில் நேற்று சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, விழுப்புரம் மார்க்கத்தில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த 'சுசூகி எர்டிகா' கார், பைக்கின் மீது மோதியது.

இதில், கணவர் குமார் கண்முன் மங்கள லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த அச்சிறுபாக்கம் போலீசார், படுகாயம் அடைந்த குமாரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்த்தனர்.

விபத்து ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றது. இருசக்கர வாகனத்தில் பகுதிவாசிகள் விரட்டி வரும் கண்டதும், 4 கி.மீ., துாரத்தில் அச்சிறுப்பாக்கம் வெங்கடேசபுரம் நுழைவுவாயில் அருகே நிறுத்தி ஓட்டுனர் தலைமறைவானார்.

காரை பறிமுதல் செய்த அச்சிறுபாக்கம் போலீசார், தலைமறைவான ஓட்டுனரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us