Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 35 விமான சேவை மழையால் பாதிப்பு

35 விமான சேவை மழையால் பாதிப்பு

35 விமான சேவை மழையால் பாதிப்பு

35 விமான சேவை மழையால் பாதிப்பு

ADDED : ஜூன் 08, 2024 06:33 AM


Google News
சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை விட்டுவிட்டு மழை பெய்தது.

இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து, விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை சேவை பாதிக்கப்பட்டது.

கோலாலம்பூர், சிங்கப்பூர், கோவா, ஹைதராபாத், கோழிக்கோடு, திருச்சி, பெங்களூரு, மதுரை, கோல்கட்டா, டில்லி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 17 விமானங்கள் தரையிறங்க முடியாமல், 30 நிமிடங்கள் வானில் வட்டமடித்தன. அதன்பின் தரையிறக்கப்பட்டன.

சென்னையில் இருந்து துபாய், அபுதாபி,கோலாலம்பூர், சிங்கப்பூர், திருவனந்தபுரம் உட்பட பல நகரங்களுக்கு செல்ல வேண்டிய 18 விமானங்கள், இரண்டு மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக புறப்பட்டு சென்றன.

விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'இடைவிடாமல் மழை பெய்ததால் விமானங்கள் புறப்படுவதிலும், தரையிறங்குவதிலும் சிரமம்ஏற்பட்டது. மழை நின்றபின், வழக்கம்போல்விமானங்கள் இயக்கப்பட்டன' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us