ADDED : ஜூலை 29, 2024 11:07 PM
சென்னை : சென்னை பெரம்பூர் - மாதவரம் நெடுஞ்சாலை, 2வது லைன் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன், 39. இவர், தன் ஆட்டோவை, கடந்த மே 6ம் தேதி சவாரி முடித்து, வீட்டின் எதிரே ஆட்டோவை நிறுத்தியுள்ளார். மறுநாள் காலை பார்த்தபோது, ஆட்டோ திருடு போனது தெரிந்தது.
போலீசார் விசாரணையில், ஐஸ்ஹவுஸ் முகமது ரஹீம், 20, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் ஆட்டோவை திருடியது தெரிந்தது. நேற்று முன் தினம் இருவரும் கைது செய்யப்பட்டனர்.