Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பெருக்கரணை கிராமத்தில் மரம் சாய்ந்து 2 குடிசை சேதம்

பெருக்கரணை கிராமத்தில் மரம் சாய்ந்து 2 குடிசை சேதம்

பெருக்கரணை கிராமத்தில் மரம் சாய்ந்து 2 குடிசை சேதம்

பெருக்கரணை கிராமத்தில் மரம் சாய்ந்து 2 குடிசை சேதம்

ADDED : ஜூன் 24, 2024 06:12 AM


Google News
Latest Tamil News
சித்தாமூர்: சித்தாமூர் அடுத்த பெருக்கரணை கிராமத்தில், மாரியம்மன் கோவில் எதிரே, ஊருக்கு சொந்தமான 50 ஆண்டு பழமை வாய்ந்த புளியமரம் இருந்தது.

நேற்று, மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியபோது, இரவு 10:00 மணிக்கு, புளியமரம் திடீரென அடியோடு குடியிருப்புப் பகுதியில் சாய்ந்தது.

இதில், துரைபாபு, வெங்கடேசன் ஆகியோருக்கு சொந்தமான குடிசைகள் சேதமடைந்தன.

அப்போது, குடிசையில் இருந்த இரண்டு மாடுகள், இடிபாடுகளில் சிக்கின. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இரண்டு மாடுகளையும் பாதுகாப்பாக மீட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us