/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பெருக்கரணை கிராமத்தில் மரம் சாய்ந்து 2 குடிசை சேதம் பெருக்கரணை கிராமத்தில் மரம் சாய்ந்து 2 குடிசை சேதம்
பெருக்கரணை கிராமத்தில் மரம் சாய்ந்து 2 குடிசை சேதம்
பெருக்கரணை கிராமத்தில் மரம் சாய்ந்து 2 குடிசை சேதம்
பெருக்கரணை கிராமத்தில் மரம் சாய்ந்து 2 குடிசை சேதம்
ADDED : ஜூன் 24, 2024 06:12 AM

சித்தாமூர்: சித்தாமூர் அடுத்த பெருக்கரணை கிராமத்தில், மாரியம்மன் கோவில் எதிரே, ஊருக்கு சொந்தமான 50 ஆண்டு பழமை வாய்ந்த புளியமரம் இருந்தது.
நேற்று, மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியபோது, இரவு 10:00 மணிக்கு, புளியமரம் திடீரென அடியோடு குடியிருப்புப் பகுதியில் சாய்ந்தது.
இதில், துரைபாபு, வெங்கடேசன் ஆகியோருக்கு சொந்தமான குடிசைகள் சேதமடைந்தன.
அப்போது, குடிசையில் இருந்த இரண்டு மாடுகள், இடிபாடுகளில் சிக்கின. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இரண்டு மாடுகளையும் பாதுகாப்பாக மீட்டனர்.