Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/எல்லையம்மன் கோவில் குளம் சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

எல்லையம்மன் கோவில் குளம் சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

எல்லையம்மன் கோவில் குளம் சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

எல்லையம்மன் கோவில் குளம் சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

ADDED : ஜூலை 04, 2024 12:39 AM


Google News
Latest Tamil News
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றி யத்துக்கு உட்பட்ட பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான எல்லையம்மன் கோவில் உள்ளது.

கோவில் குளத்தில் புற்கள் வளர்ந்து, பாசி படர்ந்து உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய கோவில் குளம், தற்போது பயன்பாடு இன்றி உள்ளதாக, அப்பகுதிவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நீர் ஆதாரத்தை காக்கும் பொருட்டு, குளத்தில் உள்ள புற்களை அகற்ற வேண்டும். குளக்கரையின் அருகே மலை மீது உள்ள முருகன் கோவில் மற்றும்குளக்கரையை ஒட்டிஎல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது.

நாள்தோறும் நுாற்றுக் கணக்கானோர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். குளக்கரையை சுற்றி நிழல் தரும் மரங்கள் அமைத்து, நடை பாதை பூங்கா, குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.

எனவே, குளத்திற்கு நீர்வரத்து கால்வாய் மற்றும் நீர் வெளியேறும் கால்வாய், படித்துறை ஆகியவற்றை சீரமைக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us