Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தங்கம் வென்ற மாரியப்பனுக்கு * ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை

தங்கம் வென்ற மாரியப்பனுக்கு * ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை

தங்கம் வென்ற மாரியப்பனுக்கு * ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை

தங்கம் வென்ற மாரியப்பனுக்கு * ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை

ADDED : ஜூன் 11, 2024 10:48 PM


Google News
Latest Tamil News
சென்னை: பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கம் வென்ற மாரியப்பனுக்கு, ஊக்கத் தொகையாக, 75 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

ஜப்பானில் பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டி (2024) நடந்தது. இதில், உயரம் தாண்டுதலில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு உயரிய ஊக்கத் தொகையாக 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

அப்போது அமைச்சர் உதயநிதி, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி, பயிற்றுனர் சத்யநாராயணன் உடனிருந்தனர்.

முன்னதாக 2019ல் துபாயில் நடந்த, உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றதற்காக 30 லட்சம் ரூபாய்; 2020ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த, பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்றதற்காக 2 கோடி; 2023ல் சீனாவில் நடந்த ஆசிய பாரா போட்டியில் வெள்ளி வென்றதற்காக 30 லட்சம்; தாய்லாந்து நாட்டில் நடந்த போட்டியில் தங்கம் வென்றதற்காக ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை, உயரிய ஊக்கத் தொகையாக தமிழக அரசு வழங்கி உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us