Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/செய்னா, மேரி கோம் கலக்கல்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்

செய்னா, மேரி கோம் கலக்கல்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்

செய்னா, மேரி கோம் கலக்கல்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்

செய்னா, மேரி கோம் கலக்கல்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்

ADDED : ஜூலை 17, 2024 10:51 PM


Google News
Latest Tamil News
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டி (2012, ஜூலை 27 - ஆக. 12) நடந்தது. இதன் துவக்க விழாவில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பங்கேற்று பெருமை சேர்த்தார். இந்தியா சார்பில் 13 பிரிவுகளில் 83 பேர் (60 வீரர், 23 வீராங்கனை) பங்கேற்றனர். இதில் விஜய் குமார் (துப்பாக்கி சுடுதல், 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்') சுஷில் குமார் (மல்யுத்தம், 'பிரீஸ்டைல்' 66 கிலோ) வெள்ளி வென்றனர். பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல் (பெண்கள் ஒற்றையர்), துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் (10 மீ., 'ஏர் ரைபிள்'), குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் (51 கிலோ), மல்யுத்த வீரர் யோகேஷ்வர் ('பிரீஸ்டைல்' 60 கிலோ) வெண்கலம் வென்றனர்.

வெண்கலத்திற்கான பாட்மின்டன் போட்டியில் சீனாவின் சென் வாங் பாதியில் விலக, செய்னாவுக்கு வெண்கலம் கிடைத்தது. இதன்மூலம் ஒலிம்பிக் பாட்மின்டனில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனையான மேரி கோம், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீராங்கனையானார். இதன்மூலம் ஒரே ஒலிம்பிக்கில், இரண்டு இந்திய வீராங்கனைகள் பதக்கம் வென்றது முதன்முறையாக அரங்கேறியது. லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட 6 பதக்கங்கள் கிடைத்தன.

இப்போட்டியில் 48 தங்கம், 26 வெள்ளி, 30 வெண்கலம் கைப்பற்றிய அமெரிக்கா, பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. போட்டியை நடத்திய இங்கிலாந்து (29 தங்கம், 18 வெள்ளி, 18 வெண்கலம்) 3வது இடத்தை கைப்பற்றியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us