/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/குத்துச்சண்டை: காலிறுதியில் ஜெய்ஸ்மின்குத்துச்சண்டை: காலிறுதியில் ஜெய்ஸ்மின்
குத்துச்சண்டை: காலிறுதியில் ஜெய்ஸ்மின்
குத்துச்சண்டை: காலிறுதியில் ஜெய்ஸ்மின்
குத்துச்சண்டை: காலிறுதியில் ஜெய்ஸ்மின்
ADDED : ஜூன் 01, 2024 10:42 PM

பாங்காக்: ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்றில் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை ஜெய்ஸ்மின் (57 கிலோ) முன்னேறினார்.
தாய்லாந்தில், பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கான உலக தகுதிச் சுற்று நடக்கிறது. பெண்களுக்கான 57 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா, சுவிட்சர்லாந்தின் அனா மரிஜா மிலிசிக் மோதினர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ஜெய்ஸ்மின் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். காலிறுதியில் ஜெய்ஸ்மின், மாலியின் மரைன் கமராவை எதிர்கொள்கிறார். இதில் ஜெய்ஸ்மின் வெற்றி பெறும் பட்சத்தில் பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெறலாம்.
இதுவரை நிஷாந்த் தேவ் (71 கிலோ), நிகாத் ஜரீன் (50), பிரீத்தி பவார் (54), லவ்லினா (75) என நான்கு பேர் பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஆண்களுக்கான 57 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சச்சின் சிவாச் 0-5 என பிலிப்பைன்சின் கார்லோ பாலமிடம் தோல்வியடைந்தார். இருப்பினும் பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடும் வாய்ப்பு சச்சினுக்கு உள்ளது. இவர், மற்றொரு அரையிறுதியில் தோல்வியடைந்த கிர்கிஸ்தானின் முனார்பெக்கை வீழ்த்தினால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம்.