Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/உலக டெஸ்ட்: ரூ. 45 கோடி இழப்பு: பைனலுக்கான டிக்கெட் விற்பனையில்

உலக டெஸ்ட்: ரூ. 45 கோடி இழப்பு: பைனலுக்கான டிக்கெட் விற்பனையில்

உலக டெஸ்ட்: ரூ. 45 கோடி இழப்பு: பைனலுக்கான டிக்கெட் விற்பனையில்

உலக டெஸ்ட்: ரூ. 45 கோடி இழப்பு: பைனலுக்கான டிக்கெட் விற்பனையில்

ADDED : மார் 12, 2025 09:35 PM


Google News
Latest Tamil News
லண்டன்: உலக டெஸ்ட் பைனலுக்கு இந்திய அணி தகுதி பெறாததால், டிக்கெட் விற்பனையில் ரூ. 45 கோடி இழப்பு ஏற்பட உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யு.டி.சி.,) நடத்தப்படுகிறது. இதன் 3வது சீசனுக்கான பைனல், வரும் ஜூன் 11-15ல், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதில் 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் விளையாடுகின்றன.

சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 0-3 என இழந்த இந்தியா, ஆஸ்திரேலியாவில் நடந்த 'பார்டர்-கவாஸ்கர்' டிராபியை 1-3 என கோட்டைவிட்டது. இதனால் இந்திய அணி தொடர்ந்து 3வது முறையாக பைனலுக்கு தகுதி பெறத்தவறியது.

லார்ட்ஸ் மைதானத்தை நிர்வகிக்கும் மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.,), இந்தியா விளையாடினால் பைனலுக்கான டிக்கெட் விலையை அதிகப்படுத்த முடிவு செய்திருந்தது. ஆனால் தகுதி பெறாததால், கூடுதல் விலை கொடுத்து டிக்கெட் வாங்க ரசிகர்கள் முன்வரமாட்டர். வேறு வழியில்லாததால், ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வழக்கமான விலைக்கே விற்பனை செய்ய உள்ளது. இதனால் டிக்கெட் விற்பனையில் ரூ. 45 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us