/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/யுவராஜ் பள்ளியிலே மாணவன் அபிஷேக்: விளாசல் அரசனாக விஸ்வரூபம்யுவராஜ் பள்ளியிலே மாணவன் அபிஷேக்: விளாசல் அரசனாக விஸ்வரூபம்
யுவராஜ் பள்ளியிலே மாணவன் அபிஷேக்: விளாசல் அரசனாக விஸ்வரூபம்
யுவராஜ் பள்ளியிலே மாணவன் அபிஷேக்: விளாசல் அரசனாக விஸ்வரூபம்
யுவராஜ் பள்ளியிலே மாணவன் அபிஷேக்: விளாசல் அரசனாக விஸ்வரூபம்

'பேட்' ரகசியம் என்ன
பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் கேப்டன் சுப்மன் கில், அபிஷேக். இருவரும் நண்பர்கள். அபிஷேக் கூறுகையில்,''சிறப்பாக ஆட நினைக்கும் போதெல்லாம் சுப்மன் பேட்டை கடனாக வாங்குவேன். இது, 14 வயதுக்கு உட்பட்டேர் போட்டிகளில் இருந்து தொடர்கிறது. ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது போட்டியின் போதும் இவரது 'பேட்' பயன்படுத்தி சதம் விளாசினேன். இதற்காக சுப்மனுக்கு நன்றி,''என்றார்.
அப்பா 'அட்வைஸ்'
அபிஷேக் சர்மாவின் சிக்சர் விளாசும் திறனை ரோகித் சர்மாவுடன் ஒப்பிடுகின்றனர். அபிஷேக் கூறுகையில்,'இளம் பருவத்தில் எனது அப்பா தான் 'சிக்சர்' விளாச ஊக்கம் தந்தார். எல்லையை கடந்து பந்து பறக்க வேண்டும் என்பார். இதை பின்பற்றியே முதல் பந்தில் இருந்து விளாசுகிறேன்,'' என்றார்.
புது 'தலைவலி'
மூன்றாவது போட்டிக்கு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் வருகிறார். இதனால் அபிஷேக் மீண்டும் துவக்க வீரராக களமிறங்குவதில் சிக்கல் ஏற்படலாம். மற்றொரு துவக்க வீரரான கேப்டன் சுப்மனுக்கு அணியை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்படும். இந்திய அணியின் 'பேட்டிங் ஆர்டர்' மாறுமா அல்லது ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு மறுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.