Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/இந்திய ஜோடிக்கு வெண்கலம்: சீன பாரா பாட்மின்டனில்

இந்திய ஜோடிக்கு வெண்கலம்: சீன பாரா பாட்மின்டனில்

இந்திய ஜோடிக்கு வெண்கலம்: சீன பாரா பாட்மின்டனில்

இந்திய ஜோடிக்கு வெண்கலம்: சீன பாரா பாட்மின்டனில்

ADDED : செப் 20, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
பீஜிங்: சீன பாரா பாட்மின்டனில் இந்தியாவின் பிரேம் குமார் ஆலே, அபு ஹுபைதா ஜோடி வெண்கலம் வென்றது.

சீனாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு (டபிள்யு.எச். 1-2) அரையிறுதியில் இந்தியாவின் பிரேம் குமார் ஆலே, அபு ஹுபைதா ஜோடி 4-21, 10-21 என்ற செட் கணக்கில் சீனாவின் மை ஜியான்பெங், ஜிமோ ஜோடியிடம் தோல்வியடைந்து வெண்கலம் வென்றது.

மற்றொரு அரையிறுதியில் (எஸ்.எல். 3-4) இந்தியாவின் பிரமோத் பகத், சுகந்த் கடம் ஜோடி 21-16, 21-17 என சீனாவின் யுயாங் காவோ, ஜியாங் லிசுவான் ஜோடியை வீழ்த்தியது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு (எஸ்.எல். 3) அரையிறுதியில் இந்தியாவின் பிரமோத் பகத் 21-16, 21-19 என, ஜப்பானின் புஜிஹராவை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் (எஸ்.எல். 4) இந்தியாவின் சுகந்த் கடம் 21-16, 21-12 என தென் கொரியாவின் சோ நடானை தோற்கடித்தார். எஸ்.எச். 4 பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் நாகர் கிருஷ்ணா 21-16, 21-16 என சீனாவின் கிங்டாவோ ஜெங்கை வென்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு (எஸ்.எச். 4) பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நித்யா ஸ்ரீ சுமதி 21-12, 15-21, 21-13 என சீனாவின் பெங்மெய் லீயை வீழ்த்தினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us