Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது

ADDED : மார் 28, 2025 05:06 AM


Google News
புதுச்சேரி : ஆந்திராவில் இருந்து புதுச்சேரிக்கு 2 கிலோ கஞ்சா கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, கோர்ட் வளாகம் எதிரே உள்ள தற்காலிக பஸ் நிலையம் வழியில்நின்றிருந்த வாலிபர் ஒருவர், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.

அவரை விரட்டி பிடித்த போலீசார், அவரிடம் நடத்திய சோதனையில், 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

பின், உருளையன்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், அவர் புதுச்சேரி, ஜி.என்.பாளையத்தை சேர்ந்த சித்தானந்தம், 20; என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி, புதுச்சேரியில் விற்பனை செய்ய கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சித்தானந்தத்திடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us