ADDED : மே 12, 2025 02:10 AM
அரியாங்குப்பம்: மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை, போக்சோ சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த ரித்திஷ்குமார், 19. இவர், 15 வயதுபள்ளி மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து, மாணவியின் பெற்றோர், அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து,ரித்திஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ், நேற்று கைது செய்தனர். பின், அவரைகோர்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.