Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

ADDED : ஜூன் 04, 2025 01:28 AM


Google News
புதுச்சேரி :வில்லியனுார், புதுநகர், 5வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி சரஸ்வதி, 20. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. சரஸ்வதி வில்லியனுாரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தநிலையில், சரஸ்வதி தினமும் போனில் பேசி வந்தார்.

கடந்த 30ம் தேதி கார்த்திக்கேயன் மனைவியை தினமும் போனில் யாருடன் பேசுகிறாய் என கேட்டுள்ளார். இதற்கு சரஸ்வதி கோபித்துக் கொண்டு அதே பகுதி சாமியார் தோப்பு பகுதியில் உள்ள அவரது மாமா வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவரை காணவில்லை. இவரை உறவினர் உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us