ADDED : ஜூன் 11, 2025 07:46 AM

புதுச்சேரி; காந்தி வீதி, வேதபுரீஸ்வரர் கோவிலில் தேரோட்டத்தில் ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர்.
புதுச்சேரி, காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவிலில், 39ம் ஆண்டு பிரம்மோற்ச விழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன்துவங்கியது. அதனை தொடர்ந்து, தினமும் ஈஸ்வரனுக்கு அபிேஷகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலையில், பல்வேறு வாகனங்களில், உற்சவ சாமி வீதியுலா நடந்தது.கடந்த 6ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 63 நாயன்மார்களுக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சாமி வீதியுலா, நேற்று தேரோட்டம் நடந்தது. அதில், அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், வெங்கடேசன் உட்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு, ஓம் நமச்சிவாய முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து ஈஸ்வரனை தரிசனம் செய்தனர்.
இரவு நந்தி பகவான் வீதியுலா நடந்தது. நாளை 12ம் தேதி தெப்ப உற்சவம், 13ம் தேதி இந்திர வாகனத்தில் வீதியுலா, 14ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. பாதுகாப்பு பணியில் பெரியக்கடை போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.