Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதலியார்பேட்டை மடத்தில் நாளை வள்ளலார் விழா

முதலியார்பேட்டை மடத்தில் நாளை வள்ளலார் விழா

முதலியார்பேட்டை மடத்தில் நாளை வள்ளலார் விழா

முதலியார்பேட்டை மடத்தில் நாளை வள்ளலார் விழா

ADDED : செப் 23, 2025 07:42 AM


Google News
புதுச்சேரி : முதலியார்பேட்டை ராமலிங்க சுவாமி மடத்தில், வள்ளலாரின் 203வது வருவிக்கவுற்றப் பெருநாள் விழா (பிறந்த நாள்), ராமலிங்க சுவாமி மடத்தின் 77வது ஆண்டு துவக்க விழா நாளை ( 24ம் தேதி) நடக்கிறது.

விழாவை முன்னிட்டு, நாளை காலை 7:00 மணிக்கு திருஅகவல் உணர்ந்தோதுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, 8:00 மணிக்கு சத்திய ஞானக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜெகநாதன் முன்னிலையில், வக்கீல் ராமமூர்த்தி, சத்திய ஞானக்கொடியை ஏற்றி விழாவை துவக்கி வைக்கிறார்.

பின், காலை 10:00 மணிக்கு திருவருட்பா கருத்தரங்கம் நடக்கிறது. ராமலிங்க சுவாமி மடத்தின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் வரவேற்கிறார். பேராசிரியர் குழந்தைவேலன் தலைமை தாங்குகிறார். பல்வேறு தலைப்புகளில் வள்ளலார் தொடர்பாக தமிழறிஞர்கள் உரையாற்றுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us