ADDED : மார் 26, 2025 03:53 AM
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். நெட்டப்பாக்கம் சிங்கட்டை சந்திப்பில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் லாஸ்பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இளங்கோ, 51; நெட்டப்பாக்கம், நேரு நகரைச் சேர்ந்த ஜானகிராமன், 46, என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து, அவர்களிடம்லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.