Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மேலாளரை தாக்கிய இருவர் கைது

மேலாளரை தாக்கிய இருவர் கைது

மேலாளரை தாக்கிய இருவர் கைது

மேலாளரை தாக்கிய இருவர் கைது

ADDED : மே 24, 2025 03:24 AM


Google News
அரியாங்குப்பம்: தனியார் கம்பெனி மேலாளரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் வீதியை சேர்ந்தவர் பிரதாப், 40; தனியார் கம்பெனி மேலாளர். அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டம் அருகில் நேற்று பிரதாப் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த, அரியாங்குப்பம், அன்னை நகர் வெங்கடேசபெருமாள், 39; சின்ன இருசாம்பாளையம் பாலாஜி, 36, ஆகியோர் பிரதாப்பை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்கு பதிந்து, வெங்கடேசபெருமாள் உட்பட இருவரை கைது செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us