Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருக்காமீஸ்வரர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

திருக்காமீஸ்வரர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

திருக்காமீஸ்வரர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

திருக்காமீஸ்வரர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

ADDED : ஜூன் 01, 2025 04:15 AM


Google News
Latest Tamil News
வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் பிரமோற்சவ தேர் திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது.

வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பிரமோற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி கடந்த மாதம் 22ம் தேதி இரவு துவங்கியது.

தொடர்ந்து 29ம் தேதி பிடாரி அம்மன் ரத உற்சவம் முடிந்தது. 30ம் தேதி விநாயகர் உற்சவம் நடந்தது.

நேற்று (31ம் தேதி) இரவு 8:30 மணியளவில் தேர் திருவிழா பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழாவில், 3ம் தேதி பரிவேட்டை நிகழ்ச்சி, 5ம் தேதி 63 நாயன்மார்களுடன் பஞ்சமூர்த்திகள் வீதியுலா, 7ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

வரும் 8ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. காலை 7:40 மணியளவில் சுவாதி நட்சத்திரத்தில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி காமேஷ்வரன், சிவனடியார்கள், சிவாச்சார்யர்கள் மற்றும் உற்சவ மரபினர் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us