Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோழிக்கடை எனக் கூறி சாராயக்கடை திறப்பு; வியாபாரத்தை மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

கோழிக்கடை எனக் கூறி சாராயக்கடை திறப்பு; வியாபாரத்தை மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

கோழிக்கடை எனக் கூறி சாராயக்கடை திறப்பு; வியாபாரத்தை மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

கோழிக்கடை எனக் கூறி சாராயக்கடை திறப்பு; வியாபாரத்தை மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

ADDED : செப் 27, 2025 02:36 AM


Google News
Latest Tamil News
அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில், கோழி வளர்க்க ெஷட் கட்டுவதாக கூறி, சாராயக்கடையை திறந்ததால், ஆத்திரமடைந்த மக்கள் வியாபாரத்தை தடுத்தி நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.

அரியாங்குப்பம் அடுத்த மணவெளி சுடலை வீதியில் கலால் துறை அனுமதி வழங்கியதன் பேரில், கடந்த 12ம் தேதி, சாராயக்கடை ஏலம் எடுத்தவர், அங்கு பணியை துவக்கினார்.

தகவலறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, சுற்றி குடியிப்புகள், பள்ளிகள், கோவில்கள், சுற்றுலா இடங்கள் உள்ளதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் எனக் கூறி, சாராயக்கடை வைப்பதை தடுத்து நிறுத்தினர்.

அதையடுத்து, சாராயக்கடை ஏலம் எடுத்தவரிடம், கலால்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, வேறு பகுதியில் கடை காட்டுவதாக கூறி சென்றனர்.

இந்நிலையில், மணவெளி அன்பு நகர் செல்லு ம் வழியில், திருமால் நகர் அருகே கடந்த இரு நாட்களுக்கு முன், மரங்கள் அடர்ந்த பகுதியில் ெஷட் அமைக்கப்பட்டது.

இங்கு என்ன கட்டுகிறீர்கள் என அப்பகுதி பொதுமக்கள் கேட்டனர். அதற்கு கோழி வளர்க்க ெஷட் கட்டுவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், ெஷட் அமைக்கப்பட்ட இடத்தில், நேற்று சாராயக்கடைக்கு பூஜை செய்து, சாராயம் வியாபாரம் செய்யப்பட்டது. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், 12:00 ம ணியளவில், கோழிக்கடை எனக் கூறி, சாராயக்கடை நடத்துவதா என, வியாபாரத்தை தடுத்தி நிறுத்தினர்.

தகவலறிந்த அரியாங்கு ப்பம் போலீசார், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us