ADDED : ஜன 05, 2024 12:52 AM
நெட்டப்பாக்கம் : சொக்கம்பட்டு ஜெயமங்கள துர்காம்பிகை கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த சொக்கம்பட்டு - கரியமாணிக்கம் கிராமத்தில் ஜெயமங்கள துர்காம்பிகை கோவில் உள்ளது.
இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.