ADDED : மார் 02, 2026 03:51 AM
நெட்டப்பாக்கம்: மடுகரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகள் பிரியதர்ஷினி, 27,என்பவரை வேலுார் மாவட்டம்,புத்துகுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
இந்நிலையில் பிரியதர்ஷினிக்கு குழந்தை பிறந்தது. அதையடுத்து குழந்தையுடன்தாய்வீடான மடுகரைக்கு கடந்த மாதம் வந்தார். கடந்த 23ம் தேதி காலை குழந்தையுடன் கணவர் வீட்டிற்கு சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


