Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மின் கட்டணம் கருத்து கேட்பு கூட்டம் 14ம் தேதி நடக்கிறது

மின் கட்டணம் கருத்து கேட்பு கூட்டம் 14ம் தேதி நடக்கிறது

மின் கட்டணம் கருத்து கேட்பு கூட்டம் 14ம் தேதி நடக்கிறது

மின் கட்டணம் கருத்து கேட்பு கூட்டம் 14ம் தேதி நடக்கிறது

ADDED : பிப் 11, 2024 02:20 AM


Google News
புதுச்சேரி: புதிய மின் கட்டணம் மீதான கருத்துக்கேட்பு கூட்டம் வரும் 14ம் தேதி நடக்கிறது.

மின்துறை கண்காணிப்பு பொறியாளர் மற்றும் துறை தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி மின்துறை மற்றும் புதுச்சேரி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில், புதிய மின் கட்டண மனு மீதான கருத்து கேட்பு கூட்டம், வரும் 14ம் தேதி காலை 10:00 மணிக்கு, புதுச்சேரி லப்போர்த் வீதி பி.எம்.எஸ்.எஸ்.எஸ்., அரங்கத்தில் நடக்கிறது.

கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர், 30 நிமிடத்திற்கு முன் வந்து, தங்கள் பெயர், முகவரியை பதிவு செய்ய வேண்டும். 2024-25ம் ஆண்டிற்கான மின் கட்டணம் மனு மீது பொதுமக்கள் தங்கள் கருத்துகள், ஆலோசனைகள் தெரிவிக்கலாம்.

விரிவான மின் கட்டண மனு ஆவணத்தை புதுச்சேரி மின்துறை இணையதளம் http://electricity.py.gov.in மற்றும் jerc இனையதளம் http://jercuts.gov.in ஆகியவற்றில் பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us