Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிறுவன் மாயம்

சிறுவன் மாயம்

சிறுவன் மாயம்

சிறுவன் மாயம்

ADDED : மே 31, 2025 01:00 AM


Google News
நெட்டப்பாக்கம் : சிறுவன் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்; கொத்தனார். இவரது இளைய மகன் மல்லேஷ், 16; பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தார். இதையடுத்து மல்லேஷை கிருஷ்ணன் வீட்டு வேலை செய்ய கூறினார். இதனால் மனமுடைந்த மல்லேஷ் கடந்த 17ம் தேதி கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து, மல்லேைஷ தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us